-பகத்சிங்
Thursday, November 15, 2007
தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள் !
-பகத்சிங்
Tuesday, November 13, 2007
தூக்கில் ஏறும் முன்....பகத்சிங் !
"நாளை காலை மெழுகுவர்த்தி ஒளிமங்குவது போல் நானும் மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.மீண்டும் பிறப்போம். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்.."
-பகத்சிங் தூக்கிலேறும்முன் தன் தம்பிக்கு எழுதிய கடிதம்
Wednesday, November 7, 2007
நவம்பர் புரட்சியில் செம்பதாகைகளின் பிரகடனங்கள் இதோ !
தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு !
நிலம் குடியானவர்களுக்கு !
சமாதானம் உலகம் அனைத்திற்கும் !
போர் ஒழிக !
இரகசிய உடன்படிக்கைகள் ஒழிக !
முதலாளித்துவ அமைச்சர்கள் ஒழிக !
Tuesday, November 6, 2007
லெனின்கிராத் "செவ்வாய்க் களம்"
ஒரு சிலருக்கே உரித்தாயிருந்ததை எதிர்த்து
நீங்கள் போர் தொடுத்தீர்கள்;
செல்வமும் அதிகாரமும் அறிவும்
எல்லோருக்கும் உரித்தாகும் பொருட்டு
நீங்கள் புகழ்மிக்க வீர மரணம் எய்தினீர்கள்."
- லெனின்கிராத் "செவ்வாய்க் களத்தில்" அமைந்துள்ள உயிர் துறந்த புரட்சி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் கருங்கற் பாளங்கள் மீது பொறிக்கப் பட்டிருக்கும் வாசகம். இதை எழுதியவர் முதலாவது கல்வித்துறை மக்கள் கமிஸார் அ.வ.லுனச்சார்ஸ்கிய் (1875 -1933)
Friday, September 28, 2007
மாவீரன் பகத்சிங்
""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.
Thursday, September 27, 2007
"ராமாயணம்" -பெரியார் தாசன்
--- பெரியார் தாசன் பேச்சு.
Friday, September 21, 2007
'திருத்தல்வாதம்'-மாசேதுங்
"நமது அடுத்தப் பரம்பரை திருத்தல்வாதத்தில் மூழ்கி பெயரளவில் சோசலிசத்தையும் உண்மையில் முதலாளித்துவத்தையும் கொண்டிருக்குமானல் அதற்கு அடுத்த பரம்பரையினரான நம் பேரக் குழந்தைகள் அதில் நிறைவுறாமல் புரட்சியில் உறுதியாக எழுந்து நின்று தம் தந்தையினரைத் தூக்கி எறிவர்."
Tuesday, August 28, 2007
இந்திய பட்ஜெட் யாருக்கானது !!
பாதுகாப்புத் துறைக்கு ரூ 98,000 கோடி ஒதுக்கீடு
Sunday, August 26, 2007
கடவுள் மறுப்பு - பெரியார்
கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
பரப்பியவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை மறுக்கும் விஞ்ஞானிகள் !!
கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள்
1914 இல் 72 %
1993 இல் 85 %
1999 இல் 90 %
நன்றி:'ராணி', 11.7.1999
Friday, August 17, 2007
ரோஜாப் போர் (1455 - 1485)
இரண்டு ஆங்கில நிலப்பிரபுத்துவ அரச வம்சங்களிடையே அரியாசனத்துக்காக நடைபெற்ற போர்; வெள்ளை ரோஜாவைத் தம் சின்னமாக கொண்ட யார்க் வம்சத்தினருக்கும் சிவப்பு ரோஜாவைத் தம் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்தினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது.
யார்க் வம்சத்தார் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த தென் பகுதியின் பெரிய நிலப்பிரபுக்களில் சிலரையும் மற்றும் பிரபுக் குலப் படைத்துரையினரையும் நகர மக்களையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டார்கள்; லங்காஸ்டர் வம்சத்தார் வட திசை வட்டாரங்களைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களைத் தமது ஆதரவாளர்களாகக் கொண்டிருந்தனர்.
இந்தப் போரின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் அனேகமாக அடியோடு அழிந்து போயின; முடிவில் புதிய டியூடர் வம்சத்தார் அரசுரிமை பெற்று இங்கிலாந்தில் எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.
Thursday, August 9, 2007
"புரட்சிகர கலை இலக்கியம்" - மாவோ
மாசேதுங்
Tuesday, July 24, 2007
"வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தேடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்"
"ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் , அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம், மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒரு நாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது, உண்மையிலேயே மகத்தான மனிதனாக முடியாது..... வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும்; அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி அற்பத்தனமானதாய், எல்லைக்குட்பட்டதாய், தன்னலன் சார்ந்ததாய் இருக்காது.
மாறாக நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மெளனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக் கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்."
-கார்ல் மார்க்ஸ்
Tuesday, July 17, 2007
"சந்தர்ப்பவாத கட்சிகள்"
-டாக்டர் அம்பேத்கார்
Monday, July 16, 2007
"வர்க்கங்கள் "- குறித்து லெனின்
Sunday, July 15, 2007
"மார்க்சியவாதி" - லெனின்
Friday, July 13, 2007
'கலை' - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
-சிங்கிஸ் ஐத்மாத்தவ்
Sunday, July 8, 2007
"தனிச் சொத்து"
-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
Saturday, July 7, 2007
சர்வாதிகாரம்
"படிப்பின் விரோதி"
Friday, July 6, 2007
"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"
"சமூதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான மிக ஆழாமான போதனையாகிய இயக்கிவியல்; வர்க்க போராட்டத்தையும் ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைத்த புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் - இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது" - வி.இ.லெனின்.
"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை" முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் தவிக்கவொண்ணாத்தன்மை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிவாகை ஆகியவற்றுக்கான விஞ்ஞான நிரூபணங்களைப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆயுதமாக வழங்குவதோடு, புரட்சிகரத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பணிகளையும் நோக்கங்களையும் வரையறுத்தது.
கம்யூனிஸ்டு சங்கத்தின் வேலைத்திட்டம் என்பதாக மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் எழுதப்பட்ட இந்த அறிக்கை 1848 பிப்ரவரியில் முதன் முறையாக லண்டனில் வெளியிடப்பட்டது.