Tuesday, August 28, 2007

இந்திய பட்ஜெட் யாருக்கானது !!

கல்வித் துறைக்கு ரூ 23,142 கோடி ஒதுக்கீடு

பாதுகாப்புத் துறைக்கு ரூ 98,000 கோடி ஒதுக்கீடு

Sunday, August 26, 2007

கடவுள் மறுப்பு - பெரியார்


கடவுள் இல்லை, கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுளை மறுக்கும் விஞ்ஞானிகள் !!

அமெரிக்காவின் Nature இதழ் (விஞ்ஞான இதழ்) எடுத்த புள்ளி விவரம்:

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள்

1914 இல் 72 %

1993 இல் 85 %

1999 இல் 90 %

நன்றி:'ராணி', 11.7.1999

Friday, August 17, 2007

ரோஜாப் போர் (1455 - 1485)

இரண்டு ஆங்கில நிலப்பிரபுத்துவ அரச வம்சங்களிடையே அரியாசனத்துக்காக நடைபெற்ற போர்; வெள்ளை ரோஜாவைத் தம் சின்னமாக கொண்ட யார்க் வம்சத்தினருக்கும் சிவப்பு ரோஜாவைத் தம் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்தினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது.

யார்க் வம்சத்தார் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த தென் பகுதியின் பெரிய நிலப்பிரபுக்களில் சிலரையும் மற்றும் பிரபுக் குலப் படைத்துரையினரையும் நகர மக்களையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டார்கள்; லங்காஸ்டர் வம்சத்தார் வட திசை வட்டாரங்களைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களைத் தமது ஆதரவாளர்களாகக் கொண்டிருந்தனர்.

இந்தப் போரின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் அனேகமாக அடியோடு அழிந்து போயின; முடிவில் புதிய டியூடர் வம்சத்தார் அரசுரிமை பெற்று இங்கிலாந்தில் எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.

Thursday, August 9, 2007

"புரட்சிகர கலை இலக்கியம்" - மாவோ

புரட்சிகர கலை இலக்கியம் , உண்மையான வாழ்க்கையினின்று பல்வேறுவிதமான பாத்திர வார்ப்புகளை உருவாக்கி, வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதில் மக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு புறத்தில் பசி,பனி, அடக்குமுறை ஆகியவற்றின் மூலமாக துன்பங்கள் உள்ளன. இன்னொரு புறத்தில், மனிதனை மனிதன் சுரண்டி அடக்கி ஒடுக்கும் கொடுமையும் உள்ளது. இத்தகைய உண்மைகள் அனைத்து இடங்களிலும் காணப்பட்டு, பொதுவானதாக இருக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் மீது எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊன்றிக் கவனம் செலுத்தி, அவைகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் போராட்டங்களையும் வகை மாதிரிப்படுத்தி கலை இலக்கியப் படைப்புகள் வெளியிட வேண்டும்.
..
அப்படைப்புகளே மக்களின் உற்சாகத்தைத் தூண்டி, அவர்கள் ஒன்றுபட்டு, தம் சூழ்நிலையை மாற்றுவதற்கன போரட்டத்தில் ஈடுபட்டு மக்களை விழிப்படையச் செய்யும்.

மாசேதுங்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 3. 82