Thursday, August 9, 2007

"புரட்சிகர கலை இலக்கியம்" - மாவோ

புரட்சிகர கலை இலக்கியம் , உண்மையான வாழ்க்கையினின்று பல்வேறுவிதமான பாத்திர வார்ப்புகளை உருவாக்கி, வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதில் மக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு புறத்தில் பசி,பனி, அடக்குமுறை ஆகியவற்றின் மூலமாக துன்பங்கள் உள்ளன. இன்னொரு புறத்தில், மனிதனை மனிதன் சுரண்டி அடக்கி ஒடுக்கும் கொடுமையும் உள்ளது. இத்தகைய உண்மைகள் அனைத்து இடங்களிலும் காணப்பட்டு, பொதுவானதாக இருக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் மீது எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊன்றிக் கவனம் செலுத்தி, அவைகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் போராட்டங்களையும் வகை மாதிரிப்படுத்தி கலை இலக்கியப் படைப்புகள் வெளியிட வேண்டும்.
..
அப்படைப்புகளே மக்களின் உற்சாகத்தைத் தூண்டி, அவர்கள் ஒன்றுபட்டு, தம் சூழ்நிலையை மாற்றுவதற்கன போரட்டத்தில் ஈடுபட்டு மக்களை விழிப்படையச் செய்யும்.

மாசேதுங்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 3. 82

No comments: